Play and watch event

27வது இலக்கியச்சந்திப்பு

27வது இலக்கியச்சந்திப்பு, மல்லிகை ஆசிரியர் தோழர் டொமினிக் ஜீவாவை சிறப்பு விருந்தினராக அழைத்ததின் மூலம் தனிக் கௌரவத்தைப் பெற்றுக் கொண்டது.

பிரான்ஸ், கார்ஜ் லே கொனஸில், 23-24.12.2001 அன்று நடைபெற்றது.

முதலாவது நிகழ்ச்சியாக சிறுசஞ்சிகைகள் விமர்சனம் இடம் பெற்றது. 'அம்மா", 'எக்ஸில்", 'உயிர் நிழல்", 'குளிர்" ஆகிய சஞ்சிகைகளை சந்துஸ் (ஜேர்மனி), அரவின்த் அப்பாத்துரை (பிரான்ஸ்), சுசீந்திரன் (ஜேர்மனி), உதயகுமார்(பிரான்ஸ்) ஆகியோர் விமர்சனம் செய்தனர்.

'உலகமயமாக்கலும் மனித சுதந்திரமும்" - என். சண்முகசுந்தரம்,

'எதிர் இலக்கியம்" - சாரு நிவேதா,

'போரும் சமாதானமும்" - கே. பரராஜசிங்கம்

ஆகிய நிகழ்ச்சிகள் 23.12.2001 அன்று மாலை இடம் பெற்றன.

நீட்சே பற்றிய நிகழ்ச்சியுடன் 24.12.2001 நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.

நீட்சேயின் மூலங்கள் - ஒரு மார்க்சிய விசாரணை - தமிழரசன்

நீட்சேயும் நீட்சேயும் - வாசுதோவன் ஆகியேரது உரைகள் இடம்பெற்றன.

கலைச்செல்வன், டொமினிக் ஜீவாவின் பிரதிகள் மீதான ஒரு வாசிப்பு என்ற நிகழ்வை நடத்தி ஜீவாவையும் அறிமுகப்பமுத்தினார்!!!

மல்லிகை ஆசிரிர் டொமினிக் ஜீவாவின் சிறப்புரை பின் இடம் பெற்றது.

தன்னை எழுத ஊக்குவித்தது என்ன? தான் பட்ட இடர்கள்,

அனுபவங்கள், சாதி ஒடுக்கு முறை, தலித்தியம், மார்க்சியம் ....... இப்படியாக அவரின் பேச்சு விரிந்து கொண்டு சென்றது. உணர்ச்சிப் பெருக்கில் பலர் கண்ணீர் விட்டனர். இரண்டு மணி நேரம் நிகழ்ந்த பேச்சின் இறுதியில் சபையோர் எழுந்து நின்று கரகோசம் செய்து தமது மரியாதையையும் அன்புகலந்த நன்றியையும் தெரிவித்தனர்.

மூன்றாம் உலகநாடுகளும் அவற்றின் மீதான ஏகாதிபத்தியத் தலையீடும் என்ற விடயம் பற்றி ரி.உமாகாந்தன் உரைநிகழ்த்தினார்.

நூல் அறிமுகத்துடன் 27வது இலக்கியச்சந்திப்பு நிறைவு பெற்றது. அடுத்த இலக்கிச்சந்திப்பை நோர்வேயில் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
(இலக்கியச் சந்திப்பு இணையத்தளத்திலிருந்து பிரதி எடுக்கப்பட்டது)

0 comments:

கருத்துரையிடுக